Thursday, January 07, 2010

வந்து விடு

உதிரும் வார்த்தைகளின்
தொனி கொண்டே அறிகிறாய்..
என் மௌன அழுகையையும்
வலியின் அழுத்தத்தையும்..
மீட்டெடுக்க துணிந்து
நீ நெருங்கும் போது
நான் இன்னும் இன்னும்
ஆழப் புதைந்திருப்பேன்..
வேர்க்கால்களில் சிக்கி..
வந்து விடு..
விரைவாய்..
மயங்கி சரியும் முன்..
கொஞ்சம் வாழ்ந்து விடுகிறேன்..

No comments: