கவிதையொன்றை
எழுதுவது என் நோக்கமல்ல..
எனக்கான வலிகளை
மகிழ்வினை
கடந்த ஒற்றை நிமிடத்தை
எல்லைகளை
அதை உடைக்கும் ஆர்வத்தை
பதிவு செய்கிறேன்..
கவிதையேனும் பட்சத்தில்
படித்துச் செல்லுங்கள்
அற்ற போதில்
பார்த்துச் செல்லுங்கள்
கூறு கட்டப்பட்ட சொற்களென..
No comments:
Post a Comment