Wednesday, January 20, 2010

கவிதை


எல்லோருக்கும் பிடித்தமான
கவிதையொன்றை 
எழுதுவது என் நோக்கமல்ல.. 
எனக்கான வலிகளை 
மகிழ்வினை 
கடந்த ஒற்றை நிமிடத்தை 
எல்லைகளை 
அதை உடைக்கும் ஆர்வத்தை 
பதிவு செய்கிறேன்.. 
கவிதையேனும் பட்சத்தில் 
படித்துச் செல்லுங்கள் 
அற்ற போதில் 
பார்த்துச் செல்லுங்கள் 
கூறு கட்டப்பட்ட சொற்களென.. 

No comments: