காலையில்
என் முன் நிற்கும் போது
உன் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறேன்..
மாலையில்
உன் முன் நிற்கும் போது
என் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறாய்..
இரவு வரட்டும்
இருவரும் சமபலத்தோடு
சந்திப்போம்..
என் பலத்தை
உனக்கு முழுதாகவும்
உன் பலத்தை
எனக்கு முழுதாகவும்
பரிமாறிக் கொள்ள..
Thursday, December 31, 2009
மறதி-பசி
ஒரு பொருளை
எடுத்த இடத்தில் வைப்பதில்லை..
வைத்த இடமும் ஞாபகத்தில்
இருப்பதில்லையெனவும்..
முன்னர் வாங்கிவரும்
தின்பண்டங்களை ஒன்று விடாமல்
காலி செய்யும் நான்
இப்போதெலாம்
சாப்பிடுவதேயில்லையெனவும்
வருத்தமுற்ற அம்மா
மறதியொழிக்க வல்லாரைச் சட்டினியும்
பசியெடுக்க பிரண்டைத் துகையலும்
உண்ணத் தருகிறாள்..
அவளுக்கெப்படித் தெரியும்?
உன்னை நினைத்து
மற்ற அனைத்தையும் மறப்பதும்..
பசலையால் பசியெடுக்காதிருப்பதும்..
எடுத்த இடத்தில் வைப்பதில்லை..
வைத்த இடமும் ஞாபகத்தில்
இருப்பதில்லையெனவும்..
முன்னர் வாங்கிவரும்
தின்பண்டங்களை ஒன்று விடாமல்
காலி செய்யும் நான்
இப்போதெலாம்
சாப்பிடுவதேயில்லையெனவும்
வருத்தமுற்ற அம்மா
மறதியொழிக்க வல்லாரைச் சட்டினியும்
பசியெடுக்க பிரண்டைத் துகையலும்
உண்ணத் தருகிறாள்..
அவளுக்கெப்படித் தெரியும்?
உன்னை நினைத்து
மற்ற அனைத்தையும் மறப்பதும்..
பசலையால் பசியெடுக்காதிருப்பதும்..
கண்ணாமூச்சி
மயக்கு
தேடித்தேடி
உன் நேசம்
நாம் ..
உன் நினைவு.
நிலவு இரவு
ஒத்திகை
நீர்ச் சுழலாக இருந்த என்னை
நதியென மாற்றினாய்..
போருக்குனம் கொண்டவளை
பொறுமை கொள்ள செய்தாய்..
நெருஞ்சியாக இருந்தவளை
நேசத்தை உடுத்த வைத்தாய்..
ஊரூராய் திரிந்தவளை
ஓரிடத்தில் அமர வைத்தாய்..
வெளிகளை கடந்தவளை
உன் இதய திசைகாட்டி
இயங்க பணித்தாய்..
இன்னும் என்ன
செய்வதாக உத்தேசம்..?
சொல்லிவிடேன்..
ஒத்திகை பார்க்கலாம்..
நதியென மாற்றினாய்..
போருக்குனம் கொண்டவளை
பொறுமை கொள்ள செய்தாய்..
நெருஞ்சியாக இருந்தவளை
நேசத்தை உடுத்த வைத்தாய்..
ஊரூராய் திரிந்தவளை
ஓரிடத்தில் அமர வைத்தாய்..
வெளிகளை கடந்தவளை
உன் இதய திசைகாட்டி
இயங்க பணித்தாய்..
இன்னும் என்ன
செய்வதாக உத்தேசம்..?
சொல்லிவிடேன்..
ஒத்திகை பார்க்கலாம்..
பாறை மனது
அலை மோதி உடையா பாறை..
மழை தூரி கரையா மண்..
காற்று தொட்டு மறையும் நுரை..
கனல் பட்டு உருகும் மெழுகு..
யாவையும் முரணாக மாறும்..
உன் பார்வைப்பொறி
பட்டுவிட்டால்..
என் பாறை மனது
பஞ்சென பற்றியது போல..
மழை தூரி கரையா மண்..
காற்று தொட்டு மறையும் நுரை..
கனல் பட்டு உருகும் மெழுகு..
யாவையும் முரணாக மாறும்..
உன் பார்வைப்பொறி
பட்டுவிட்டால்..
என் பாறை மனது
பஞ்சென பற்றியது போல..
பலூன் பாரம்
கண்கள்..
உன்னிரு கண்களில்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாயோ?
ஒருமுறை நிலவும் குளிர்ச்சியையும்,
இரவின் இணக்கத்தையும்..
ஒருமுறை நேசத்தின் நெருக்கத்தையும்,
நெருப்பின் தாக்கத்தையும்..
ஒருமுறை கவர்ந்தும் கடந்தும்,
கடத்தியும் படுத்தியும்..
ஒருமுறை மயங்க வைத்தும்,
தெளிய வைத்தும்..
என்னை பாடாய்படுத்தி விடுகிறது..
என்னதான்
ஒளித்து வைத்துள்ளாய்
உன் கண்களில்..
என் பிம்பங்களை தவிர..
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாயோ?
ஒருமுறை நிலவும் குளிர்ச்சியையும்,
இரவின் இணக்கத்தையும்..
ஒருமுறை நேசத்தின் நெருக்கத்தையும்,
நெருப்பின் தாக்கத்தையும்..
ஒருமுறை கவர்ந்தும் கடந்தும்,
கடத்தியும் படுத்தியும்..
ஒருமுறை மயங்க வைத்தும்,
தெளிய வைத்தும்..
என்னை பாடாய்படுத்தி விடுகிறது..
என்னதான்
ஒளித்து வைத்துள்ளாய்
உன் கண்களில்..
என் பிம்பங்களை தவிர..
சேட்டைகளின் ரசிகை
சிறுசிறு சண்டை
என் சுவாசம்
சிந்தனை..
இதய சிறகு.
உன் சிரிப்பு
Wednesday, December 30, 2009
சில கனவுகளும் நிஜங்களும்
தேநீர்
நிழலோடு விளையாடி
Tuesday, December 29, 2009
சுவடு
சண்டை
மொட்டை மாடி
மின்சாரம் தடைபட
மொட்டை மாடியில்
உறங்க சென்றோம்..
படுத்தவுடன் உனக்கு
உறக்கம் சொக்க
என்னையும் தூங்கென்றாய்..
தூக்கம் வரவில்லையென
சிணுங்க
நட்சத்திரங்களை எண்ணு
தூக்கம் வருமென்றாய்..
அதிகாலை புரண்டு படுக்கையில்
கண்விழித்த நீ
5,92,009 என
காற்றில் விரலசைத்து
கண்மூடி சொல்வதை பார்த்தாய்..
கைவிரல்களை நீவி விட்டு,
இமைகளில் மெதுவாய் அழுத்தி,
இதழில் இதழ் சேர்த்து
நான் விட்ட இடத்திலிருந்து
நீ நட்சத்திரங்களை
என்ன துவங்கினாய்..
அது சிறிது சிறிதாய்
குறைந்து ஒற்றை துருவ
நட்சத்திரமே எஞ்சியிருந்தது..
மொட்டை மாடியில்
உறங்க சென்றோம்..
படுத்தவுடன் உனக்கு
உறக்கம் சொக்க
என்னையும் தூங்கென்றாய்..
தூக்கம் வரவில்லையென
சிணுங்க
நட்சத்திரங்களை எண்ணு
தூக்கம் வருமென்றாய்..
அதிகாலை புரண்டு படுக்கையில்
கண்விழித்த நீ
5,92,009 என
காற்றில் விரலசைத்து
கண்மூடி சொல்வதை பார்த்தாய்..
கைவிரல்களை நீவி விட்டு,
இமைகளில் மெதுவாய் அழுத்தி,
இதழில் இதழ் சேர்த்து
நான் விட்ட இடத்திலிருந்து
நீ நட்சத்திரங்களை
என்ன துவங்கினாய்..
அது சிறிது சிறிதாய்
குறைந்து ஒற்றை துருவ
நட்சத்திரமே எஞ்சியிருந்தது..
நந்தியாவட்டை
Monday, December 28, 2009
கிச்சு கிச்சு
''கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்''
எனப்பாடி விரலிடுக்கில்
என் இதயம் சொருகி
மேடான மண்ணுக்குள்
மறைத்து வைக்கிறேன்..
உன் விழி பார்த்திருக்க..
ஓரிடத்தில் இரு கை சேர்த்து
மண்ணில் பொத்துகிறாய்..
அவ்விடம் தவிர
வேறிடத்தில் தேடுகிறேன்..
புதைத்து வைத்த இதயத்தின..
உன் கைக்குள் மறைந்திருந்ததை
'குச்சி'என எடுத்து சிரிக்கிறாய்..
அது குச்சியல்ல..'இதய'மென
எப்படிச் சொல்வேன்..?
கியா கியா தாம்பாளம்''
எனப்பாடி விரலிடுக்கில்
என் இதயம் சொருகி
மேடான மண்ணுக்குள்
மறைத்து வைக்கிறேன்..
உன் விழி பார்த்திருக்க..
ஓரிடத்தில் இரு கை சேர்த்து
மண்ணில் பொத்துகிறாய்..
அவ்விடம் தவிர
வேறிடத்தில் தேடுகிறேன்..
புதைத்து வைத்த இதயத்தின..
உன் கைக்குள் மறைந்திருந்ததை
'குச்சி'என எடுத்து சிரிக்கிறாய்..
அது குச்சியல்ல..'இதய'மென
எப்படிச் சொல்வேன்..?
வார்த்தை
சிந்தனை
பைத்தியம் ..
மேகம் மறைக்க
மறைந்திருப்பதும்
விலக ஒளிர்ந்திருப்பதுமான
நிலவைப் போல்
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?
அழைப்பு ஏதேனும் தவற விட்டுவிட்டோமா?
என நள்ளிரவு போதில்
இடையிடையே விழித்து பார்த்துவிட்டு
உறங்குவதே வாடிக்கையாகிவிட்டது..
கடந்த ஆறுமாத காலமாய்..
கண்டுபிடித்துவிட்டாயா..?
இந்த கவிதையில்..
எவ்வளவு காலமாய்
எனக்கு பைத்தியம்
பிடித்திருக்கிறதென..
மறைந்திருப்பதும்
விலக ஒளிர்ந்திருப்பதுமான
நிலவைப் போல்
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?
அழைப்பு ஏதேனும் தவற விட்டுவிட்டோமா?
என நள்ளிரவு போதில்
இடையிடையே விழித்து பார்த்துவிட்டு
உறங்குவதே வாடிக்கையாகிவிட்டது..
கடந்த ஆறுமாத காலமாய்..
கண்டுபிடித்துவிட்டாயா..?
இந்த கவிதையில்..
எவ்வளவு காலமாய்
எனக்கு பைத்தியம்
பிடித்திருக்கிறதென..
இது அதீத நேசம்..
உணர்வு
நேர்மறை
எப்போதும்
நேர்மறையாகச் சிந்திக்க
வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது..
ஒவ்வொரு முறையும்
உன் வேண்டுகோள்..
கட்டளை யாவும்..
நீ எனக்குள் வசிப்பதை மறைவின்றி
நேராகவே சொல்லியிருக்கிறேன்..
நமது பகிர்தல் இன்னும்
ஆழமாய் நீளவேண்டுமெனவும்
நேர்மறையாகவே சிந்திக்கிறேன்..
ஆணுக்கு காதல் வாழ்க்கையின்
ஒரு பகுதியாகவும்
பெண்ணுக்கு அதுவே
வாழ்க்கையாகவும்
இருக்கும் பட்சத்தில்
இதைவிட வேறெப்படி
நேர்மறையாகச் சிந்திக்க?
நேர்மறையாகச் சிந்திக்க
வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது..
ஒவ்வொரு முறையும்
உன் வேண்டுகோள்..
கட்டளை யாவும்..
நீ எனக்குள் வசிப்பதை மறைவின்றி
நேராகவே சொல்லியிருக்கிறேன்..
நமது பகிர்தல் இன்னும்
ஆழமாய் நீளவேண்டுமெனவும்
நேர்மறையாகவே சிந்திக்கிறேன்..
ஆணுக்கு காதல் வாழ்க்கையின்
ஒரு பகுதியாகவும்
பெண்ணுக்கு அதுவே
வாழ்க்கையாகவும்
இருக்கும் பட்சத்தில்
இதைவிட வேறெப்படி
நேர்மறையாகச் சிந்திக்க?
என்னிலை
கோபம்
அறுவடை
செயல்பாடு
குறுஞ்செய்தி
Thursday, December 24, 2009
கருங்குவளை
சுவாசம்
என் இதய துடிப்பின்
ஓசை கேட்டு
உன் துயில் களையும்
என்றால் அன்பே
என் சுவாசம்
சற்றுநேரம்
நிறுத்திவைப்பேன்..
ஓசை கேட்டு
உன் துயில் களையும்
என்றால் அன்பே
என் சுவாசம்
சற்றுநேரம்
நிறுத்திவைப்பேன்..
Wednesday, December 16, 2009
அனுமதி..
நிலவு
என் குரலின்
கண்ணீரை
உனக்கு கேட்கவிடாமல்
மறைக்கிறேன்..
ஆனால் என் இதயம்
அழும் ஓசை கேட்டு
நிலவு வந்து
ஆறுதல்
சொல்லிவிட்டு போகிறது....
கண்ணீரை
உனக்கு கேட்கவிடாமல்
மறைக்கிறேன்..
ஆனால் என் இதயம்
அழும் ஓசை கேட்டு
நிலவு வந்து
ஆறுதல்
சொல்லிவிட்டு போகிறது....
Tuesday, December 15, 2009
பந்து
Subscribe to:
Posts (Atom)