Monday, January 18, 2010

சுருள் முடிகள்

சுருள் சுருளான
என் முடிகள்
காற்றை இடைநிறுத்தி
சற்று நேரம் ஈரம் உலர்த்தி
விடைக் கொடுக்கிறது..
புன்னகையோடு புறப்பட்ட
காற்று மாலை
மீண்டும் திரும்பிய போது
சுருள் முடிகள் கைநீட்டியது..
இருள் மேவியிருக்கும்
என் கண்களை..
அதன் ஈரத்தை உலர்த்த..

No comments: