சுருள் சுருளான
என் முடிகள்
காற்றை இடைநிறுத்தி
சற்று நேரம் ஈரம் உலர்த்தி
விடைக் கொடுக்கிறது..
புன்னகையோடு புறப்பட்ட
காற்று மாலை
மீண்டும் திரும்பிய போது
சுருள் முடிகள் கைநீட்டியது..
இருள் மேவியிருக்கும்
என் கண்களை..
அதன் ஈரத்தை உலர்த்த..
No comments:
Post a Comment