எவரும் பார்ப்பதில்லை
இரத்தத்தில் தோய்க்கப்பட்டு
என்னில் கசியும் வலியினை..
எவரும் கேட்பதில்லை
இரவுகளில் சுவர்கள்
விரிசலடையும்
அளவுக்கான
அழுத்தமாக முனகும் குரலை..
எவருக்கும் புரிவதில்லை..
என் பச்சை நரம்புகளினூடே
பயணிக்குமென்
மெல்லிய விருப்பத்தை..
No comments:
Post a Comment