Monday, January 18, 2010

பச்சை நரம்பு

எவரும் பார்ப்பதில்லை
இரத்தத்தில் தோய்க்கப்பட்டு
என்னில் கசியும் வலியினை..
எவரும் கேட்பதில்லை
இரவுகளில் சுவர்கள்
விரிசலடையும்
அளவுக்கான
அழுத்தமாக முனகும் குரலை..
எவருக்கும் புரிவதில்லை..
என் பச்சை நரம்புகளினூடே
பயணிக்குமென்
மெல்லிய விருப்பத்தை..

No comments: