Saturday, January 23, 2010

விழிகள்.

பண்பலை
கேட்டபடியே
உறங்கிப் போயிருந்தேன்..
நீ எனதறையில்
நுழைந்த போது ...

காதுகளிலிருந்து
கருவியினை
கழற்றி வைத்திவிட்டு
முடிகோதி
அருகமர்ந்தாய்..

உனது வாசம்
என் நாசி தொட
விழித்துப் பார்த்தேன்..
உற்றுப் பார்த்த
உன் விழிகளில் இருந்து
பெருகிய நேசத்தை
சிதறாமல் ஏந்தியது
என் விழிகள்..

No comments: