
நந்தியாவட்டையின்
ஒவ்வொரு இதழ்களிலும்
உனக்கும் எனக்குமான சில சொற்கள்
ஒளிந்திருந்தன..
வீட்டில் யாரும் பார்க்குமுன்
பறித்து வந்து
புத்தகத்தின் பக்கங்களில்
வைத்து மூடினேன்..
இரண்டொரு நாட்களுக்குப் பின்
பிரித்த புத்தகத்திலிருந்து
விழுந்தது..
நந்தியாவட்டையும்
குட்டி நந்தியாவட்டையும்..
No comments:
Post a Comment