Tuesday, January 26, 2010

ஒளி உமிழ் ..இருள் குடி


பின்னிரவில் 
பதற்றத்துடன்
விழிப்பு வருகிறது 
கைப்பேசியை 
அழுத்தி மணி பார்க்கையில் 
உனது ஐந்து குறுஞ்செய்திகளும் 
இரண்டு தவறிய அழைப்புகளும் 
வந்திருக்க 
உன்னை அப்போதே 
தொடர்பு கொள்ளும்பொருட்டு 
குறுஞ்செய்திகளையும் 
அழைப்புகளையும் செய்கிறேன் 
பதிலிறுக்காத நிலையில் 
நீ உறங்கி போயிருப்பாயென 
உணர்ந்து இருள் மேய்கிறேன்.. 
அந்த பின்னிரவு விடிகாலை நோக்கி 
மெல்ல நகரத் துவங்கியது 
இருள் குடிப்பதும் 
ஒளி உமிழ்வதுமாய்.. 

No comments: