Thursday, January 21, 2010

நிலாத் துண்டு

அலையில் விழுந்து
சிதறி தெறித்த
நிலா துண்டுகளைப்
பொறுக்கி
என் மடியில் சேகரிக்கிறாய்..
மணலில் காய்ந்த
நிலவு ஓடி வந்து
தட்டி விடுகிறது..
அலைக்குள்
நிலாத் துண்டுகளோடு
தடுமாறி
விழுந்த என்னை
அள்ளிக் கொண்டாய்
முழு நிலவென..

No comments: