Tuesday, January 26, 2010

கவிதை கருவுற்றது..


புதிதாய் 
பிறந்த கவிதையொன்றை 
உனக்குத் தர 
காத்திருந்தேன் 
கவிதையும் காத்திருந்தது 
வெகுநேரம் 
கண்ணைய்ர்வதும் 
திடுக்கிட்டு எழுவதுமாய் 
உறங்கியிருந்தேன் 
கவிதை உறங்கவில்லை.. 
உன் நுழைந்து 
என்னோடு பகிர்ந்தாய் 
உன்னை 
காத்திருந்த கவிதை 
கருவுற்றது.. 

No comments: