Tuesday, January 26, 2010

வெள்ளை நிழல்


நீண்ட இரவில் 
உன்னோடு பயணம் 
கண்ணாடிகளில் 
பார்வை பகிர்ந்து 
வேகத்தடைகளில் 
நிதானம் மீறி 
இயல்பாக எழும் பெருமூச்சு 
உன் எல்லை வந்ததும் 
இறங்கி ஏதோ பேச 
ஏறியதென் கோபம் 
திரும்பிப் பார்க்காமல் 
முன்னேறுகிறேன் 
எதையனுப்பி 
இந்த முறை 
சமாதனப்படுத்தப்போகிறாய்? 
நினைத்தபடியே 
உறங்கிப் போனேன்.. 
நள்ளிரவில் சத்தமிட்டு 
எனதறைக்குள் 
சமாதானம் பேச வந்தது.. 
உனது வெள்ளை நிழல்..

No comments: