உன்னோடு பயணம்
கண்ணாடிகளில்
பார்வை பகிர்ந்து
வேகத்தடைகளில்
நிதானம் மீறி
இயல்பாக எழும் பெருமூச்சு
உன் எல்லை வந்ததும்
இறங்கி ஏதோ பேச
ஏறியதென் கோபம்
திரும்பிப் பார்க்காமல்
முன்னேறுகிறேன்
எதையனுப்பி
இந்த முறை
சமாதனப்படுத்தப்போகிறாய்?
நினைத்தபடியே
உறங்கிப் போனேன்..
நள்ளிரவில் சத்தமிட்டு
எனதறைக்குள்
சமாதானம் பேச வந்தது..
உனது வெள்ளை நிழல்..
No comments:
Post a Comment