Saturday, January 23, 2010

சட்டை பை

விழி மூடி
கிடக்கையிலும்
உன் நினைவு ஓடிக் கடக்கிறது
நொடிதோறும்..
ஒரு அடி கொடுத்து
உறங்க வைக்கிறேன்..
வாய் பொத்தி
அழுதது
கண்ணயர்ந்த போது
மீண்டும் எழுந்தோடுகிறது..
உன் சட்டைப்பை நோக்கி..

No comments: