Thursday, January 07, 2010

ஊடல்

ஒரு மாலைப் பொழுதில்
நேர்ந்த ஊடலில்
ஆங்கில எழுத்துக்களை
ஒவ்வொன்றாய்
வரிசை மாறாமல்
நீயும் நானும்
அனுப்பியபடி இருந்தோம்..
குறுஞ்செய்தியில்
கடைசி எழுத்தை
அனுப்பி முடிக்கையில்
தீர்ந்து போயிருந்தது
ஊடல்...

No comments: