Tuesday, January 26, 2010

காலணி


கட்டிலுக்கடியில் 
கழற்றிப் போடப்பட்டிருந்த 
என் காலணியில்
கண்ணாடி மின்னியபடியிருந்தது    
விளக்குகளை அணைத்த பின்னும் 
என் கண்களிலிருந்து 
கசியும் ஒளியும் 
காலணியின் கல்லிலிருந்து 
வெளியாகும் ஒளியும் 
இருளை ஊடுருவி 
வெளிச்சமான நுலிழை அளவிலான 
மெல்லிய ஒளிப்பாதையை 
சமைக்க 
அதிலேறிப் பயணப்பட்டது 
எனக்கான கனவுகள் 
தன் அத்தனை தடைகளையும் 
உடைத்தபடி.. 

No comments: