நீ உறங்கும் போது
அருகில் வந்து
ஒலி எழுப்பிவிட்டு
ஓடி மறைகிறேன்..
வாயும் கையுமாய்
என்னைப் பிடிக்க வேண்டி
உறங்குவதாய்
பாவனை செய்து என்னைப்
பிடித்தே விட்டாய்..
என் கையைப் பிடித்துக் கொண்டு
என்ன வேண்டுமென்றாய்.?
உன் கைப்பிடிக்க வேண்டுமென
சொல்லவும் வேண்டுமோ?
No comments:
Post a Comment