
ஆரம்பத்தை அறிந்தவனே
விதிகளை மீறி
ஆடுகளத்தில் நுழைந்தாய்
அதற்கு பெயர்
அழுகுணி ஆட்டமே
இதில் தோற்பவர்
வென்றவராகவும்
வென்றவர்
தோற்றவராகவும்
கருதப்படும்..
விருப்பம் இருந்து
விதிமுறைகள் அறிந்து
விளையாடத் தயாராயிருப்பவர்கள்
காலத்திற்குள் காலடி வைக்கவும்.
மற்றவர்கள் பார்வையாளராக
வெளியே நிற்கவும்..
No comments:
Post a Comment