உன்
சன்னலின் வழி
தெறித்த நீரில்
வளர்ந்த செடியில்
பூத்த மலரொன்று
பறித்து செல்வாஎன
சில நாட்களாய்
காத்திருந்தது உதிராமல்..
ரசித்து மட்டும்
செல்வதே உனக்கு
வழக்கமாயிருந்தது..
ஒருநாள் மாலையில்
மலரைக் காணாமல்
சோர்வுடன் உள் நுழைந்தாய்..
உன் அறையில் வைத்திருந்த
கால்டுவெல்லின் புத்தகத்தின்
மேலிருந்தது அது..
ஆம்
நீயறியாமலே
கொய்து வைத்திருக்கிறாய்..
நேற்று இரவில்..
No comments:
Post a Comment