Thursday, January 07, 2010

சில நாட்களாய்

உன்
சன்னலின் வழி
தெறித்த நீரில்
வளர்ந்த செடியில்
பூத்த மலரொன்று
பறித்து செல்வாஎன
சில நாட்களாய்
காத்திருந்தது உதிராமல்..

ரசித்து மட்டும்
செல்வதே உனக்கு
வழக்கமாயிருந்தது..

ஒருநாள் மாலையில்
மலரைக் காணாமல்
சோர்வுடன் உள் நுழைந்தாய்..

உன் அறையில் வைத்திருந்த 
கால்டுவெல்லின் புத்தகத்தின்
மேலிருந்தது அது..

ஆம்
நீயறியாமலே
கொய்து வைத்திருக்கிறாய்..
நேற்று இரவில்.. 

No comments: