Wednesday, January 20, 2010

சொல்லச் சொல்ல


எச்சரிக்கை செய்தும் 
கேளாமல் 
சாலை மணலில் 
விளையாடி 
கைகால் சிராய்ப்புடன் 
அழுது கொண்டே 
வீடு திரும்பும்
குழந்தையினைப்  போல் 
என் மனம்
இன்று வலி கண்டது 
நீ சொல்லச் சொல்லக் 
கேட்காமல்
நான் செய்த 
ஒரு செயலால்...  

No comments: