Monday, January 18, 2010

எனது நிழல்

என் பாரத்தை
சுமந்திழுத்து வருகின்றது
எனது நிழல்
நான் செல்லும் பாதையெங்கும்..
என் நேரத்தை
தின்று செரித்து
எச்சமிடுகின்றன
உனது  நினைவுகள்..
என் இரத்த நாளமெங்கும்..
யாதும் அறியாமல்
உடன் பயணிக்கிறாய்
கவலைகள் அற்றவளாய்..
சுதந்திர வெளிகளில் திரிபவளாய்..
உருவகித்து..

No comments: