Monday, January 18, 2010

துயில் களை

அடைக்கப்பட்ட
கண்ணாடி ஜன்னல்களின்
இடுக்குகளில் இருந்து கசியும்
வாடைக்காற்றில் எலும்பும்
உருகிவிடும் போலிருக்கிறது..
உன் துயில் களைந்து
சில வார்த்தைகள் பேசு..
குளிருக்கு இதமாய்
போர்த்திக் கொண்டு பயணிப்பேன்..

No comments: