Saturday, January 02, 2010

உன் வருகை

எரியும் ஏக்கங்களை
அணைத்து விடுவதாய் இருந்தது
உன் பார்வை..
மொழியினை
பின்னுக்குத்தள்ளி
மௌனத்தினை பேசவைத்தது
உன் புன்னகை..
நட்சத்திரங்களை
தோற்கடித்து நள்ளிரவில்
நடமாடுவதாயிருந்தது
உன் மென்னொளி..
இரவுகளை சல்லடையிலிட்டு
மூடி இணைக்கும் பிணக்கும்
செய்வதாயிருந்தது
உன் ஸ்பரிசம்..
எல்லாவற்றையும்
மாற்றியிருந்தது உன் வருகை
என் பூமியையும்..

No comments: