Saturday, January 02, 2010

புலன்கள்

தொடர்ந்து ஒலிக்கும்
தொலைபேசியின் சத்தம்
உன் காதுகளை எட்டவில்லை..
அடுத்தடுத்து வந்து சேகரமாகும்
குருஞ்செய்திகளையும்
நீ கண்ணுறவில்லை..
மனதை ஒருமுகப்படுத்தி
டெலிபதியில் பேசுகிறேன்
உணரவில்லை..
புலன்களனைத்தும்
ஓய்வெடுப்பது தவறில்லை..
புலன்கள் ஓய்வாகவே இருப்பதும்
சரியில்லை..

No comments: