Saturday, January 02, 2010

உன் வார்த்தை

சிலசமயங்களில்
உன்னிடமிருந்து
தெறிக்கும் வார்த்தைகள்
விருட்சம் சுமந்திருக்கும்
விதை போலவும்..
ஒரு சொல் சுமந்திருக்கும்
கதை போலவும்..
பாசாங்கற்ற குழந்தையின்
முத்தத்தைப் போலவும்..
பிளவுபட்டு விழும் பாறையின்
சத்தத்தைப் போலவும்..
வலிக்காது தொடரும்
நிழலைப் போலவும்
ஒத்திருக்கிறது..
என் வார்த்தைகள்
உனக்கு இவற்றில் ஒன்றாவது தந்திருக்குமா?
எதைக் கொடுத்திருக்கும்?
யோசிக்கிற நொடிகளில்
என் வார்த்தைகள்
உருண்டோடி ஒளிகின்றன..
உன் சொற்களின் பின்னால்..

No comments: