கவலைப்பட நேரமில்லை..
எதைப்பற்றியும்..
இப்படியாகச்
சொல்லி ஓடியபடியிருந்தபோது
கால் தடுக்கிவிட்டது..
கண்டுபிடித்துவிட்டேன்
கவலைக்கான வேரினை..
பிடுங்கி எரிகிறேன்
அதன் சல்லி வேர்களை..
அதனருகிலேயே
காயத் தொடங்கியிருந்த
விதையொன்றிற்கு
நீரூற்றிய போது
துளிர்த்துக் கொண்டது சல்லி வேரும்..
மகிழ்ச்சியின் நிழலில்
இளைப்பாறி செல்லட்டும்
கொஞ்சம் வருத்தமும்..
No comments:
Post a Comment