Saturday, May 15, 2010

நேசத்தின் கையளிப்பு


ஒரு காலைப் பொழுதில்
கதவிடுக்கில்
விரல்பட்டு நசுங்கியதாக
நீயும்
குளிக்கும் போது
எனது நகத்தாலான பெருங்கீறலை
நானும்
சொல்லிக் கொண்டோம்..
பின்னர் வந்த நாட்களில்
அது பற்றிய விசாரிப்புகள்
கடந்த பின்னும் 
எஞ்சியிருக்கும் தழும்புகள்
நினைவுபடுத்துகின்றன
நேசத்தின் கையளிப்புகளை..

No comments: