Saturday, May 15, 2010

இனிமையானவன்.


இதயத்தில் 
யாரோ ஓங்கி
அறைவது போலான வலி
அழுது தீர்க்கிறேன்
உருண்டு புரளுகிறேன்..

இரத்தம் சொட்ட சொட்ட 
சிறிது நேரத்தில் 
வலி குறைந்து தூங்கிப் போகிறேன்..
காலையில் என்னைச் சுற்றி 
மொய்த்துக் கிடந்தன எறும்புகள்..

என் கண்ணீருக்கு காரணமானவன் 
இனிமையானவன்.

No comments: