நோயுற்றோ
சிகிச்சைக்காகக்
கொண்டுவரப்படும்
பறவைகளுக்கான மருத்துவமனையில்
வலிகொண்ட ஒற்றை இறகையும்
சுமக்க இயலாமல்
வரிசையில் தடுமாறி நிற்கிறேன்..
குடிநீரும், உணவும்
தந்து செல்லும்
அந்த மூதாட்டியின்
கண்களில் தெறிக்கும் அன்பில்
வலிகளை ஒப்புக் கொடுக்கிறேன்..
ஒட்ட வைக்க இயலா
ஒற்றை இறகும்
உதிர்ந்தபின்
நீச்சல் கற்க துவங்குகிறேன்..
கடலடியில்
எனக்கான
புது உலகை நிறுவுவதற்காக!
No comments:
Post a Comment