Saturday, May 15, 2010

மகிழ்வும் தவிப்பும்


காதல் எனும் சொல்லுக்குள்
மட்டும் அப்படி 
என்னதான் இருக்கிறதோ?
வலியும் சுகமுமாய்
மகிழ்வும் தவிப்புமாய்
திளைப்பும் திகைப்புமாய்
முதலும் முடிவுமாய் 
வானும் பூமியுமாய் 
இப்படி யாவுமாய் 
நிறைந்து நிறைக்குமிந்த காதலில் 
அப்படி 
என்னதான் இருக்கிறதோ?

No comments: