Saturday, May 15, 2010

நம்பிக்கை


ஒரு இதயத்தின் துடிப்பை
நிறுத்த அதிக பிரயத்தனம்
செய்ய வேண்டியதில்லை..
அதன் நம்பிக்கையின் முனையில் 
சற்றே ஒற்றைச் சொல்லால் 
உராய்த்துச் செல்வதே
போதுமானது..

ஒரு மகிழ்வின வேரை பிடுங்க
அதிக முயற்சி தேவையில்லை..
அதன் பூக்களின் இதழ்களை 
சற்றே காலடியில் மிதித்துச் 
செல்வதே போதுமானது..

ஒரு மரணத்திற்கான 
வரவேற்பிற்கு 
எப்போதும் அதிக முயற்சியும் 
பிரயத்தனமும் தேவையாயிருப்பதில்லை.. 
ஒரு பிறப்பிற்கான கடும்முயற்சியையும்
நம்பிக்கையையும் போல்.. 

No comments: