உனதழைப்பையேற்க
இல்லச் சூழலும்
இதயச் சூழலும்
சரியாயிருக்கவில்லை..
ஏதேனும் ஒரு முடிவைச் சொல்
என வீட்டிலும்
இதுதான் என் முடிவென நீயும்
எனைத் துண்டாடிய போதும்
என் பயணத்தில்
யாதொரு மாற்றத்தையும்
புகுத்த விரும்பவில்லை..
மனிதனை வெல்லும்
சூழலைவிட
சூழலை வெல்லும் மனிதனை
நேசிக்கிறேன்..
அந்த நேசிப்பினூடே
சின்னஞ்சிறியதாய் துளிர்க்கிறது
இன்னுமாய் எனது வேர்..
No comments:
Post a Comment