Thursday, May 27, 2010

நீயளித்த நம்பிக்கை


உன்னைச் சுற்றி 
வருமென் நினைவுகளை 
புறந்தள்ளி 
என் நேசத்திற்கு 
பெரும்கொள்ளி 
வைத்துவிட முயல்கிறாய்
ஒருக்காலும் 
நீயளித்த நம்பிக்கை 
வார்த்தைகளுக்கு முன்னால் 
தோற்று திரும்பாதென் நேசம். 

No comments: