ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகளையும்
உனது
ஒற்றை ஸ்பரிசத்தில்
ஆயிரமாயிரம் கனவுகளையும்
உனது
ஒற்றைக் குறுஞ்செய்தியில்
ஆயிரமாயிரம் எண்ணங்களையும்
விரியச் செய்தாய்..
எனது
ஆயிரமாயிரம் பாடல்களும்
ஆயிரமாயிரம் கவிதைகளும்
உன்னிடம்
ஒரு துளி காதலைக் கூடவா
விதைக்காமலிருக்கும்..?
No comments:
Post a Comment