Saturday, May 15, 2010

ஆயுளில் பாதி


யாரும் யாரையும்
எச்சரிக்கையாயிருக்கும்படி
சொல்லவில்லை..

சிக்கியவர்கள்
மற்றவர்களும் 
சிக்கட்டும் என்றும்
தப்பித்தவர்கள்
மற்றவர்கள் 
மாட்டிக் கொள்ளட்டுமென்ற
காரணத்தாலும் எச்சரிக்கை
செய்யவில்லை போலும்..

சக்கரவியூகத்தில்
உட்செல்லும் 
அபிமன்யுவுக்கு
வெளியேற தெரியாதை போல
காதலில் 
நுழைந்தவர்கள்
வெளியேற 
யாரும் கற்றுத் தருவதில்லை..

தானே விழுந்து
தானே மயங்கி
தானே எழுந்து 
நிற்கும் போது
வாழ்க்கை
ஆயுளில் பாதியைக் 
கடந்திருக்கும்.. 

No comments: