Saturday, May 15, 2010

இருளை இழுத்துப் போர்த்தியபடி..


காதுக்குள் இசை வழிந்திருக்க 
கண்களில் கனவுகள் கசிந்திருக்க 
நிகழ்காலத்தில் வருங்காலம் வடிந்திருக்க 
மெல்ல இருள் முடிந்து விடிந்திருக்க 
அக்கணத்தில் உன் வருகை நிகழ்ந்தது 
அனைத்தையும் துடைத்துவிட்டு 
அடைக்கலமாகிறேன்   உன் வெப்பத்திற்குள்
இருளை இழுத்துப் போர்த்தியபடி.. 

No comments: