Saturday, May 15, 2010

ஒற்றை வார்த்தை


நீ
முன்னர் உதிர்த்த 
ஒற்றை வார்த்தையின் 
கைப்பிடித்து 
நெடுந்தூரம் வந்துவிட்டேன்..

இது ஒருவழிப்பாதைதான்
உடன் நீயும் வரலாம்
திரும்ப இயலாது..

மறந்துவிடாதே
திரும்பப் பெற்றுக் கொள்ள
வார்த்தைகள்
வெறும் பொருளல்ல.. 

No comments: