Saturday, May 15, 2010

வலி


இந்த வலி 
பரிச்சயமானதல்ல..
முன்பின் கண்டறியாத
அதன் செய்கைகள்
ஒரு செயலையும் செய்யவிடாமல்
பசியுறக்கம் மறக்கச் செய்து
கட்டுண்டு கிடக்கச் செய்கிறது
கட்டற்றும் அலைய வைக்கிறது..
பிறர் சொல்லியும் புரியாத 
இந்த வலியை
அனுபவிப்பதில் 
அனுகூலமுமுண்டு..
வலியின் அறிமுகம் ஒருவேளை
உண்மையை பறைசாற்றலாம்.. 

No comments: