Saturday, May 15, 2010

சொற்களில் முட்களேந்தி..

அடிக்கடி திட்ட செய்து 
திட்டும்போதெல்லாம் புன்னகைத்து 
படக்கென கோபமூட்டி 
கோபத்தில் மௌனித்து 
திடீரென மகிழ்ச்சி தந்து 
திட்டமின்றி தீண்டல் நிகழ்த்தி 
மனசு முழுக்க 
மலர் பரப்பிக் கிடக்கிறாய்..
சொற்களில் மட்டும் 
முட்களேந்தி..

No comments: