அலட்சியப்படுத்துகிறாய்..
பிறகு பேசலாமென
பதிலுக்குக் காத்திராமல்
துண்டிக்கிறாய்..
பரிதாபத்துடன்
திரும்பும்
மிதமிஞ்சிய நேசத்தின்
நிலை கண்டு
வலிக்கத்தான் செய்கிறது..
இருப்பினும்
எப்போதாவது
நீ வேண்டி நிற்க
நேருமென
பதப்படுத்தி வைக்கிறேன்
களங்கமற்ற நேசத்தை
காலத்தின் கோப்பைக்குள்..
No comments:
Post a Comment