Saturday, May 15, 2010

கண்ணீர்த்துளிகள்


அவசியமற்றதாக இருக்கிறது
நேற்று நள்ளிரவிலிருந்து
இன்று அதிகாலை வரை 
தூறும் மழை..
எனது பேச்சினைப் போல்..
வாசனையோடு
வெப்பத்தையும் 
வெளிக்கிளப்பிய மழைக்கு
எப்படி தெரியப் போகிறது?
மழையோடு போட்டி போடுமென் 
கண்ணீர்த்துளிகள்.. 

No comments: