கயவர்களின் திருட்டு தனத்தாலும்
செல்லைத் தொலைத்து விட்டு
எண்கள் தொலைந்து போனதற்காகவும்
வீட்டில் திட்டு வாங்க வேண்டியிருக்குமெனவும்
குற்றுணர்வின் விளிம்பு நிலையிலும்
பதறும் மனதின் துடிப்பிற்கு மத்தியில்
காதலாலானவனுக்கு
நேசத்திலும் கோபத்திலும்
பெறப்பட்ட
காதலியின்
மீட்க முடியாக குறுஞ்செய்திகள்
பற்றிய சிந்தனை
வதைத்தெடுக்கும்
நினைக்கும் தோறும்..
No comments:
Post a Comment