Saturday, May 15, 2010

பரிச்சயமற்ற சாலையோரங்களில்


எல்லாவற்றையும் 
சொல்லிவிட்டால்
பின் எதைத்தான் 
உள்ளிருத்தி வைப்பது?

எல்லாவற்றையும் 
கேட்டுவிட்டால்
பின் என்னதானிருக்கும்
சொல்வதற்கு?

தேவையானதை கேட்டும், சொல்லியும்
அனாவசியத்தை விட்டும், விலகியும்
நடக்கலாம்..

பரிச்சயமற்ற சாலையோரங்களில்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
மஞ்சள் நிறப்பூக்களையும்
கோடை வெயிலை மறைத்து நிற்கும்
வெண்மேகத்தையும்
தந்து செல்லும் 
புரிதலினூடாகும் நம் வாழ்க்கை..

No comments: