Saturday, May 15, 2010

அழிவுறா எழுத்து


சிதைவுற்ற பொழுதுகளை
சீராக்கியும்
மங்கிப் போன கனவுகளுக்கு 
ஒளியேற்றியும்
வெறிச்சோடியிருந்தயென் பூமியில் 
விதையூன்றியும்
மேகங்களைத் திரட்டி
மழைபொழிந்தும்
பசுமை நிறைத்த உன் நேசத்திற்கு
எதைக் கொடுத்து ஈடாக்குவேன்?
அழிவுறா எழுத்துக்களில்
உன்னை வாழவைப்பதை தவிர.. 

No comments: