பகல்களின் சாலைகளில்
வழிந்தோடுமென் நேசத்தை
காலத்தின் கைப்பையிலிருந்து
மீட்டுவிடும் முயற்சியில்
தோற்பதே வாடிக்கையாயிருக்கிறது..
என்றேனும் வெற்றிகிட்டிவிடுமென
நம்பிக்கையின் ஒளிக்கீற்றில்
ஓடிக் கொண்டிருக்கிறதென் நேசம்
வாகனங்களில் அடிபட்டுவிடாத
எச்சரிக்கையுடனும்..
வாழப்பிரியப்படும் ஏக்கத்துடனும்..
No comments:
Post a Comment