Saturday, May 15, 2010

வாழப்பிரியப்படும் ஏக்கம்..


என் இரவுகளில் கரைந்துருகி 
பகல்களின் சாலைகளில் 
வழிந்தோடுமென் நேசத்தை
காலத்தின் கைப்பையிலிருந்து 
மீட்டுவிடும் முயற்சியில்
தோற்பதே வாடிக்கையாயிருக்கிறது..
என்றேனும் வெற்றிகிட்டிவிடுமென
நம்பிக்கையின் ஒளிக்கீற்றில் 
ஓடிக் கொண்டிருக்கிறதென் நேசம் 
வாகனங்களில் அடிபட்டுவிடாத 
எச்சரிக்கையுடனும்..
வாழப்பிரியப்படும் ஏக்கத்துடனும்..

No comments: