Saturday, May 15, 2010

நேசம்



‘சாப்பிட்டாயா’வென
வேளைக்கொரு தரம் கண்காணிப்பு..

‘எங்கே இருக்கிறாய்’ என
மணிக்கொருமுறை விசாரிப்பு..

மனநிலையறியத் துடிக்கும்
ஒருவித தவிப்பு..

எதையேனும் பகிர்கையில்
தோன்றும் பூரிப்பு..

இவையேதும் இல்லாவிடினும்
ஒன்றும் மாறப்போவதில்லை..

வெட்டாமலிருந்தாலும் 
வளரும் நகத்தினைப் போல்..
பேசாமலிருந்தாலும்
பெருகும் நேசம்.. 

No comments: