வேளைக்கொரு தரம் கண்காணிப்பு..
‘எங்கே இருக்கிறாய்’ என
மணிக்கொருமுறை விசாரிப்பு..
மனநிலையறியத் துடிக்கும்
ஒருவித தவிப்பு..
எதையேனும் பகிர்கையில்
தோன்றும் பூரிப்பு..
இவையேதும் இல்லாவிடினும்
ஒன்றும் மாறப்போவதில்லை..
வெட்டாமலிருந்தாலும்
வளரும் நகத்தினைப் போல்..
பேசாமலிருந்தாலும்
பெருகும் நேசம்..
No comments:
Post a Comment