நிகழ்ந்த
அந்த துயர சம்பவத்தை
அக்கணமே
யாரிடமாவது
சொல்ல வேண்டுமென துடித்து
உள்ளூர் தோழியொருத்திக்கு
எண்ணழுத்தினேன்..
தொடர்பு எல்லைக்கு
வெளியேயிருப்பதாக சொல்லியது
பதிவு செய்யப்பட்ட குரல்..
அடுத்து
நெடுந்தொலைவிலிருக்கும்
தோழிக்கு அழைக்க
மாதக் கூட்டத்திலிருப்பதாகச் சொல்லி
அழைப்பைத் துண்டித்தால்..
என்னவனுக்கு
தொடர்புகொள்ள
அழைப்பு முழுமையாய் சென்று
நின்றுவிட்டது..
வேறுதுவும்
செய்யத் தோன்றாமல்
வலிகளையெல்லாம்
முடிந்தவரை வார்த்தைகளாக்கி
வடித்து விட்டு
கவிழ்ந்து படுத்தேன்..
No comments:
Post a Comment