
துரத்தியடிக்கிறது..
உனது மௌனத்தை
உடைத்து
நீயுரைத்த சொற்கள்..
உனது பொய்மைகளின்
பின்னே இருக்கும்
உண்மைகளின்
பிம்பத்தை அறிந்திருக்கிறேன்..
ஏதோ ஒன்றிற்காக
ஏதோ ஒன்றைச் சொல்லி
நழுவுகிறாய்..
யாதொரு வழியும்
புலப்படாமல்
உனது நிழலைச் சுற்றியே
பின்னிக் கிடக்கிறேன்..
No comments:
Post a Comment