Saturday, May 15, 2010

நீயுரைத்த சொற்கள்..

நெடுந்தொலைவுக்கு 
துரத்தியடிக்கிறது..
உனது மௌனத்தை 
உடைத்து 
நீயுரைத்த சொற்கள்..

உனது பொய்மைகளின் 
பின்னே இருக்கும் 
உண்மைகளின்
பிம்பத்தை அறிந்திருக்கிறேன்..

ஏதோ ஒன்றிற்காக
ஏதோ ஒன்றைச் சொல்லி
நழுவுகிறாய்..

யாதொரு வழியும் 
புலப்படாமல் 
உனது நிழலைச் சுற்றியே
பின்னிக் கிடக்கிறேன்..

No comments: