Saturday, May 15, 2010

பேராண்மை


நீ 
வெட்டியெறிந்த நேசத்தை
கையிலேந்தியபடி
நெடுஞ்சாலையோரத்தில்
மயங்கிக் கிடக்கிறேன்..

கண்டுகொள்ளப்படாத 
எனது நேசமும்
தேற்றுவாரின்றி
தலைவிரிகோலமாய்
புரண்டழுகிறது..

குற்றுயிராய்
கிடக்கும் அதற்கு 
இறுதிச் சடங்குகள் 
செய்யவேனும் 
வந்துவிடு..
உனது பேராண்மைமிக்க 
பிடிவாதத்தை விட்டுவிட்டு..

No comments: