வெட்டியெறிந்த நேசத்தை
கையிலேந்தியபடி
நெடுஞ்சாலையோரத்தில்
மயங்கிக் கிடக்கிறேன்..
கண்டுகொள்ளப்படாத
எனது நேசமும்
தேற்றுவாரின்றி
தலைவிரிகோலமாய்
புரண்டழுகிறது..
குற்றுயிராய்
கிடக்கும் அதற்கு
இறுதிச் சடங்குகள்
செய்யவேனும்
வந்துவிடு..
உனது பேராண்மைமிக்க
பிடிவாதத்தை விட்டுவிட்டு..
No comments:
Post a Comment