Thursday, October 29, 2009

இதை தவிர..

வார்த்தைகளைத் தவிர
வேறொன்றும்
என்னிடம் வசீகரமில்லை..
நேசத்தை தவிர
என்னிடம்
அள்ளிக் கொடுக்க ஏதுமில்லை..
உண்மையை தவிர
உனக்கு சொல்வதற்கு
என்னிடம் பொய்களில்லை...
கவிதையை தவிர
உன்னை ஒளித்துவைக்க
எனக்கு மறைவிடம் தெரியவில்லை..

No comments: