Saturday, October 03, 2009

மன்னிப்பு..

மன்னிப்பை
யாரும் யாருக்கும்
அவ்வளவு எளிதாக
வழங்கவோ கேட்கவோ
முடியாது..
ஏனெனில்
அதன் துவக்கம்
ஒரு நேசிப்பிற்கான
விதையாகவோ
ஒரு வலையிலிருந்து
விடுபடுவதாகவோ
அமையக்கூடும்..
இப்போது
உன்னை மன்னிக்கிறேன்
நேசிப்பின் விதையாக..

No comments: