Monday, October 05, 2009

எட்டாவது கடல்..

உறங்க வைத்தும்
விழிக்க வைத்தும்
இமைகளாய் இயங்கி
இப்போது
உறவறுத்து போனாய்..
உறங்கவோ
விழிக்கவோ
வழியற்று
பெருகியோடிய கண்ணீர்
உருவாக்கியிருக்கிறது
எட்டாவது கடலொன்றை..

No comments: